டெல்லி டாக்டர் பெயரில் 5 ஆண்டுகள் வைத்தியம் பார்த்த போலி டாக்டர்... கார் வாங்கியதால் சிக்கினார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ளது யஷ்வந்த்பூர். இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் மாதம் ரூ 48 ஆயிரம் சம்பளத்தில் கடந்த 2009ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக பணிக்கு சேர்ந்துள்ளார் அதுல் பதக் (31) என்ற நபர்.
தன்னை மருத்துவர் என சான்றிதழ் சாட்சியங்களுடன் பணியில் சேர்ந்துள்ளார் அதுல். அம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பரிசோதித்து சரியான மருந்துகளை எழுதி தந்துள்ளார். இதனால், நோயாளிகளுக்கோ அல்லது மற்ற டாக்டர்களுக்கோ அதுல் மீது சந்தேகமே வரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதுல். காரின் உரிமையாளரிடம் தான் டெல்லி மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் எனக் காட்டிக் கொண்ட அதுல், தன் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் விரைவில் முழுப் பணத்தையும் செலுத்தி விடுகிறேன் எனக் கூறி, ரூ 20 ஆயிரத்தை முன்பணமாக அளித்து காரை எடுத்துச் சென்றுள்ளார். பதிலுக்கு கார் உரிமையாளர் வசம் தனது பைக்கை ஒப்படைத்துள்ளார்.
மாதங்கள் ஓடியும் காருக்குரிய மீதிப்பணம் வராததால், அடிக்கடி அதுலுக்கு போன் செய்துள்ளார் கார் உரிமையாளர். ஆனால், எதிர்தரப்பில் சரியான பதில் வராமல் போகவே மீண்டும் காரை கொண்டு வந்து விட்டு விடும்படி அதுலிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காரின் உரிமையாளர் அவசர வேலையாக வெளிநாடு சென்று விட அதுலின் பைக் திருட்டுப் போனது. பைக் திருட்டுப் போன தகவலைக் கூறுவதற்காக அதுலைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் கார் உரிமையாளர். ஆனால், அதுல் தனது நம்பரை மாற்றியதால் கார் உரிமையாளர் குழப்பமடைந்தார்.
எனவே, மருத்துவ இயக்கம் உதவியுடம் அதுலின் முகவரியைப் பெற முயற்சித்துள்ளார். அப்போது தான் அவருக்குத் தெரிந்துள்ளது, தன்னிடம் கார் வாங்கியவர் உண்மையான மருத்துவர் அதுல் அல்ல என்று. உண்மையான மருத்துவர் அதுல் டெல்லி மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார் கார் உரிமையாளர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுநாள் வரை பெங்களூர் மருத்துவமனையில் மருத்துவராக வளைய வந்த அதுலின் உண்மையான பெயர் விகாஸ் சர்மா. ஜம்மு காஷ்மீரை சொந்த ஊராகக் கொண்ட விகாஷ் ஆயுர்வேதிக் மருத்துவம் படித்துள்ளார்.
உண்மையான மருத்துவர் அதுலின் சான்றிதழ்களை கைப்பற்றிய விகாஷ் அதனை கலர் ஜெராக்ஸ் செய்து தனது புகைப் படத்தை ஒட்டி பயன் படுத்தியது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விகாஷை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் போலி மருத்துவர் ஒருவர் பணியாற்றியது அங்குள்ள மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications