பாகிஸ்தானின் ஒரு தோட்டாவுக்கு இந்திய ராணுவத்தினர் கணக்கற்ற தோட்டாக்களால் சுட்டு தள்ளுங்கள்- ராஜ்நாத்
பாகிஸ்தான் ஒரு தோட்டாவுக்கு எண்ணற்ற தோட்டாக்களால் சுட்டுத் தள்ளுங்கள் என்று இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அகர்தலா: பாகிஸ்தான் மண்ணில் இருந்து வரும் தோட்டாவுக்கு இங்கிருந்து எண்ணற்ற தோட்டாக்களை பதிலடியாக கொடுங்கள் என்று இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
60 சட்டசபை தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு வரும் 18-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகர்தலாவின் புறநகர் பகுதியான பர்ஜலாவில் தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அண்டைய நாடான பாகிஸ்தானுடன் இந்தியா அமைதியான முறையில் உறவு கொண்டிருக்கவே விரும்புகிறது.

அமைதியை விரும்புகிறது
இதனால் பாகிஸ்தான் மீது நாம் முதலில் தாக்குதல் நடத்தியதில்லை. அண்டை நாடுகளுடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் இருக்கவே நாம் விரும்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஜம்மு- காஷ்மீர் மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் படைகள் நமது இந்திய படைகள் மீதும் இந்திய பிரதேசத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எண்ணற்ற தோட்டாக்கள்
பாகிஸ்தானில் இருந்து வரும் ஒரு தோட்டாவுக்கு இங்கிருந்து எண்ணற்ற வகையில் தோட்டாக்களை திருப்பி அனுப்புமாறு இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கடந்த 35 ஆண்டுகால ஆட்சியில் அந்த மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிட்டது.

பாஜகவால் மட்டுமே முடியும்
அதுபோல் பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு பிறகு திரிபுரா மக்கள் இடது சாரிகள் மாநிலத்தை ஆள வழி வகுத்து கொடுத்தால் இந்த மாநிலம் மற்றும் அதன் மக்களின் எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவர். திரிபுரா உள்ளஇட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்த நாட்டையும் பாஜகவால் மட்டுமே முன்னேற்ற முடியும்.

வறுமையை ஒழிக்க வேண்டும்
இந்தியாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன. ஏன் இத்தனை மாநிலங்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுத்துள்ளன என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஏனெனில் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வறுமையை ஒழித்து வேலைவாய்ப்புகளை அளிக்க பாஜகவால்தான் முடியும் என்றும் உண்மையாக நம்புகின்றனர்.

பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்
திரிபுராவை ஆள இடது சாரிகளுக்கு எத்தனை முறை வாய்ப்பை கொடுத்து விட்டீர்கள். இந்த ஒரு முறை பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள். அப்போது மாநிலத்தில் அனைத்து தரப்பினர் நலனுக்காகவும் மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்காகவும் வாய்ப்பு தாருங்கள் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications