'நெட் நியூட்டிராலிட்டி' பிரசாரத்தில் ஃபோர்டு பவுண்டேசன்.. மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது இதற்குதான்
டெல்லி: நாட்டின் நலனுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்கும் என்.ஜி.ஓக்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.. தற்போது ஃபோர்டு பவுண்டேசன் மீது மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்கு காரணமே நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தை கையிலெடுப்போருக்கான பின்னணியில் ஃபோர்டு பவுண்டேசன் நிறுவனம் இருக்கிறது என மத்திய அரசு கருதுவதாக கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்..
'நெட் நியூட்டிராலிட்டி' ...இதுதான் இப்போது இணையவாசிகளின் பெரும் முழக்கமாக இருக்கிறது... நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசை விளாசியிருந்தார்.

இந்த நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தின் பிரதான ஸ்பான்சராக இருப்பதே அமெரிக்காதானாம்... அதுவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுண்டேசன் மிகப் பெரிய அளவில் இந்த பிரசாரத்துக்கான நிதி உதவியை செய்து வருகிறது...
அதேபோல் 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஃபோர்டு பவுண்டேசன், ஓபன் சொசைட்டி பவுண்டேசன் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டும் 196 மில்லியன் டாலர் தொகையை இந்த நெட் நியூட்டிராலிட்டி பிரசாரத்துக்காக செலவு செய்துள்ளனவாம்.. இது தொடர்பான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபடுபவர்களும் ஃபோர்டு பவுண்டேசன் நிர்வாகிகள்தானாம்..
இதனால்தான் இப்போது ஃபோர்டு பவுண்டேசனின் பணப் பரிமாற்றத்தை முடக்கியிருக்கிறது மத்திய அரசு...அத்துடன் நாடு முழுவதும் இருக்கும் வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஃபோர்டு பவுண்டேசனின் நிதியை கையாளக் கூடாது என்கிறது அந்த உத்தரவு.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு...












Click it and Unblock the Notifications