இரண்டு நாள் அரசு முறை பயணமாக சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை பயணம்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
இந்திய - இலங்கைக்கு இடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியா-இலங்கை கூட்டு ஆணைக்குழு 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் 9ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், மின்சாரம், எரிவாயு, பொருளாதாராம், தொழில்நுட்பம், கடற்சார் ஒத்துழைப்பு, சமூகம், பண்பாடு, கல்வி, சுகாதாரம் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
இதன் பின்னர் அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்கும் சுஷ்மா சுவராஜ், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்தும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications