பசியில் ஊருக்குள் வந்த யானைகள்.. வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்த மனிதர்கள்... அசாமில் கொடூரம்

அசாமில் யானைகள் ஊருக்குள் வந்ததால், மக்கள் வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் உணவு தேடி யானைகள் காட்டில் இருந்து ஊருக்குள் வந்துள்ளது. யானைகளின் வருகையால் கோபமடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.

அசாம் அருகில் உள்ள 'நாகோன்' காட்டுப் பகுதியில் இருந்த 100க்கும் அதிகமான யானைகள் நேற்று ஊருக்குள் வந்து இருக்கிறது. அங்கு மக்கள் வசிக்கும் 'கத்தியாடோலி' பகுதியில் யானைகள் புகுந்து இருக்கிறது.

Forest officials beaten up by people after elephants came into village

மேலும் இந்த யானைகள் அனைத்தும் சாப்பாட்டிற்காக அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு இருந்த சில வீடுகள் சேதம் அடைந்துள்ளது. சில வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.

யானைகளின் வருகையால் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளனர்.

ஆனால் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த காரணத்தால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் சேர்ந்த அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.

தற்போது இந்த மோசமான செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+