என்.ஹெச். ஆர்.சியின் புதிய தலைவராக நீதிபதி ஹெ.எல்.தத்து பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையமான என்.ஹெச்.ஆர்.சியின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹெச்.எல்.தத்து நேற்று பதவியேற்றார்.
முன்னதாக, என்.ஹெச்.ஆர்.சியின் தலைவராக இருந்த நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கடந்த் 2015 ஆம் வருடம், மே 11 ஆம் தேதியன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு என்.ஹெச்.ஆர்.சி ஆணையத்தின் உறுப்பினரும், நீதிபதியுமான சிரியாக் ஜோசஃப் தற்காலிகத் தலைவர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவை என்.ஹெச்.ஆர்.சியின் தலைவராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார். இதைத் தொடர்ந்து என்.ஹெச்.ஆர்.சியின் 7 ஆவது தலைவராக தத்து நேற்று பொறுப்பேற்றுக் கொண்டு பதவியில் அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications