ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்து 2019 தேர்தலை சந்தித்த பாஜக- விடாது வெளுக்கும் சத்யபால் மாலிக்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களைக் காட்டி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டதாக முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். அதாவாது 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் டிரக் ஒன்று ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோதி வெடித்தது. இத்தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது.

புல்வாமா தாக்குதல் சம்பவம் அப்போது பெரும் புயலை கிளப்பியது. ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதன்பின்னர் புல்வாமா தாக்குதல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் தொடர்பாக மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை மத்திய அரசும் பாஜக மூத்த தலைவர்களும் மறுத்தனர். தற்போது சத்யபால் மாலிக் விசாரணை ஏஜென்சிகளின் விசாரணைகளை எதிர்கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மிரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சத்யபால் மாலிக் மீண்டும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக கூறியதாவது: புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் அலட்சியம் குறித்தும் பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் இதை பற்றி வெளியில் பேசாமல் அமைதியாக இருக்கும்படி பிரதமர் மோடி என்னை அச்சுறுத்தினார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நமது ராணுவ வீரர்களின் உடல்களை முன்வைத்தே பாஜக எதிர்கொண்டது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி இருந்தால் பல ராணுவ அதிகாரிகள் சிறைக்குதான் போயிருக்க வேண்டும். என் மீதான வழக்கு விசாரணைகளை கண்டு எல்லாம் நான் அஞ்சப் போவது இல்லை. உண்மையைத்தான் பேசுவேன். இவ்வாறு சத்யபால் மாலிக் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications