சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார் தற்கொலை!!
சிம்லா: ''வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டேன், இதனால் நான் அடுத்த பயணத்திற்கு செல்கிறேன்'' என்று தற்கொலைக்கான காரணத்தை முன்னாள் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து இந்தக் கடிதத்தை போலீசார் எடுத்துள்ளனர். இன்று மாலை நடைபயிற்சியும் சென்று வந்துள்ளார். பின்னர் மேல் மாடியில் இருக்கும் பூஜை அறைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது மனைவி, மகன், மகன் அனைவரும் வீட்டின் கீழ் அறையில் இருந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும் என்று சிம்லா போலீஸ் எஸ்பி மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார். ஆனால், மன உளைச்சலில் இருந்தாரா என்பது குறித்து அஸ்வனி குமாரின் குடும்பத்தினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச போலீஸ் டிஜிபி சஞ்சய் குன்றா கூறுகையில், ''மாலை நடைபயிற்சி செல்வதற்காக சென்றுள்ளார். இதையடுத்து வீட்டின் மேல் மாடியில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.
நாகலாந்து, மணிப்பூர் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவர் ஆகஸ்ட் 2006 முதல் ஜூலை 2008 வரை ஹிமாசலப் பிரதேசத்தின் டிஜிபி ஆகவும் இருந்துள்ளார்.
1973வது குழுவில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று இருந்தார். 2014ல் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகவும், 2013ல் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும் சிறிது காலம் பொறுப்பு வகித்து வந்தார்.
இதற்கு முன்னதாக 2008 முதல் 2010 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, ஹேம்ராஜ் கொலை, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகளை கையாண்டு வந்தார் .
70 வயதான இவரது உடலை போலீசார் மீட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். 174 குற்றவியல் சட்டத்தின் கீழ் சோட்டா சிம்லாவில் இருக்கும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
சிர்மவுர் மாவட்டத்தில் இருக்கும் நஹன் என்ற இடத்தில் பிறந்த அஸ்வனி குமார் 1973ல் இந்திய போலீஸ் பணியில் சேர்ந்தார். 1985ல் சிம்லா மாவட்ட போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றினார். பின்னர் 1990 எஸ்பிஜி குழுவில் இடம் பெற்றார்,
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications