Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார் தற்கொலை!!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: ''வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டேன், இதனால் நான் அடுத்த பயணத்திற்கு செல்கிறேன்'' என்று தற்கொலைக்கான காரணத்தை முன்னாள் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு உடல் உபாதைகள் இருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Former Nagaland governor, ex-CBI director Ashwani Kumar found hanging at his Shimla residence

இவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து இந்தக் கடிதத்தை போலீசார் எடுத்துள்ளனர். இன்று மாலை நடைபயிற்சியும் சென்று வந்துள்ளார். பின்னர் மேல் மாடியில் இருக்கும் பூஜை அறைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது மனைவி, மகன், மகன் அனைவரும் வீட்டின் கீழ் அறையில் இருந்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும் என்று சிம்லா போலீஸ் எஸ்பி மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார். ஆனால், மன உளைச்சலில் இருந்தாரா என்பது குறித்து அஸ்வனி குமாரின் குடும்பத்தினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

Former Nagaland governor, ex-CBI director Ashwani Kumar found hanging at his Shimla residence

இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச போலீஸ் டிஜிபி சஞ்சய் குன்றா கூறுகையில், ''மாலை நடைபயிற்சி செல்வதற்காக சென்றுள்ளார். இதையடுத்து வீட்டின் மேல் மாடியில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.

நாகலாந்து, மணிப்பூர் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவர் ஆகஸ்ட் 2006 முதல் ஜூலை 2008 வரை ஹிமாசலப் பிரதேசத்தின் டிஜிபி ஆகவும் இருந்துள்ளார்.

1973வது குழுவில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று இருந்தார். 2014ல் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகவும், 2013ல் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராகவும் சிறிது காலம் பொறுப்பு வகித்து வந்தார்.

இதற்கு முன்னதாக 2008 முதல் 2010 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, ஹேம்ராஜ் கொலை, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்குகளை கையாண்டு வந்தார் .

70 வயதான இவரது உடலை போலீசார் மீட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். 174 குற்றவியல் சட்டத்தின் கீழ் சோட்டா சிம்லாவில் இருக்கும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

சிர்மவுர் மாவட்டத்தில் இருக்கும் நஹன் என்ற இடத்தில் பிறந்த அஸ்வனி குமார் 1973ல் இந்திய போலீஸ் பணியில் சேர்ந்தார். 1985ல் சிம்லா மாவட்ட போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றினார். பின்னர் 1990 எஸ்பிஜி குழுவில் இடம் பெற்றார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+