மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம்... ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏ மரணம்!
ஜெய்பூர்: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்.ஏ. உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறிப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ராஜஸ்தானிலும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குர்சரண் சப்ரா (65). ராஜஸ்தானில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், லோக்ஆயுக்தா சட்டத்துக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இவர் கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த குர்சரண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுயநினைவை இழந்ததால் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு தினங்களாக கோமா நிலையில் இருந்த அவருக்கு இயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெலாட் விடுத்துள்ள அறிக்கையில், ''ராஜஸ்தான் மாநில அரசின் அலட்சிய போக்கால்தான், மதுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குர்சரண் சப்ரா மரணம் அடைந்திருக்கிறார். சப்ராவை முதலமைச்சர் சந்தித்து பேசி, அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தார் சப்ரா பிழைத்திருக்கக்கூடும்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications