தங்கச்சிக்கு தைரியம் கொடுக்க நீதிமன்றத்திற்கு வந்த அண்ணன் அழகிரி!
2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2 ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் ஆஜராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

தீர்ப்பை முன்னிட்டு டெல்லியில் கனிமொழி மற்றும் ஆ ராசாவின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில் தங்கை கனிமொழிக்கு ஆதரவாக அவரது சகோதரரும் திமுக முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications