ரூ. 251-க்கு ஸ்மார்ட் போன் தயாரித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனர் கைது
ரூ. 251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் மோகித் கோயல் பாலியல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கைது-வீடியோ
டெல்லி: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மோகித் கோயல் பாலியல் குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.251 -க்கு ஸ்மார்ட் போனை தருவதாக கூறியிருந்தது. இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெறப்பட்டது.எனினும் பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் அந்த நிறுவனத்தின் இணையதளம் சிறிது நேரத்திலேயே முடங்கியது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்மோகித் கோயலை போலீஸார் நேதாஜி சுபாஷ் பகுதியில் கைது செய்தனர். டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்துக்காக மோகித் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications