பிரதமர் அலுவலக செயலர்களாக 4 புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு புதிததாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "பிரதமர் அலுவலகத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி குல்சார் நடராஜன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரிஜிஸ் பாண்டே, மயூர் மகேஸ்வரி, சிரிகர் கேஷவ் பர்தேசி ஆகியோர் இணை செயலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜன், 1999 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முடித்து, ஆந்திராவில் பணியாற்றிய அதிகாரியான இவர்தான் தற்போது இயக்குனராக இருந்து வருகின்றார்.
பாண்டே, 2004 ஆம் ஆண்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியா இவர் மணிப்பூர், திரிபுரா கேடரைச் சேர்ந்தவர். தற்போது பொருளாதாரத்துறையில் பணியாற்றி வருகின்றார்.
மகேஸ்வரி, 2003 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முடித்தவர், பர்தேசி 2001 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர்.












Click it and Unblock the Notifications