Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்காரத்தை தடுக்க முயன்ற பெண்ணின் காது அறுப்பு... உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது. இதனை அந்தப் பெண் தடுக்க முயன்றதால் அவரது காதை அந்தக் கும்பல் அறுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய 4 பேர் முயன்றுள்ளனர். அதனை அந்தப் பெண் தடுக்க முயன்றதால் அந்த கும்பல் அவரது காதை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

Four men cut off girls ear when she protest against it in UP!

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். மேலும் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் கடும் கோபம் கொண்ட அந்த கும்பல், பெண்ணின் காததை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள பாக்பட் தொகுதி பா.ஜ.க எம்பி சத்தியபால் சிங், இந்த புகார் முற்றிலும் பொய்யான ஒன்று என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தான் சமாஜ்வாடி கட்சியிடம் பேசியதாகவும் இந்த சம்பவம் டிசம்பர் 31ஆம் தேதி நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பலாத்கார முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்ற சத்யபால் சிங் பக்கத்துவீட்டாரிடம் ஏற்பட்ட சண்டையில் அந்தப் பெண்ணின் காது அறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+