டெல்லி முழுவதும் ”ஃப்ரீ வைபை”- நிறுவனங்களுடன் விறுவிறுப்பாக பேச்சுவார்த்தையில் ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் தலைநகர் முழுவதும் இலவச "வைபை" இணைய வசதியினை விரைவாக அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி தற்போதே தொடங்கி விட்டது.
அதன்படி, பேஸ்புக் நிறுவனம் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி தன்னார்வ தொண்டர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணி செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த வசதி 30 நிமிட விளம்பரத்துடன் செயல்படுத்தப்படும். இந்த விளம்பரம் மூலம் அரசுக்கு ரூபாய் 100 கோடி வருமானமும் கிடைக்கும்.
இந்த விளம்பர திட்டத்தை கெஜ்ரிவால் அங்கீகரிப்பாரா எனத் தெரியவில்லை. எனினும் அவரிடம் இது குறித்து விளக்கப்படும்" என்றனர்.
இந்த இலவச திட்டப்படி டெல்லியில் வைபை மூலம் இணையதளம் உபயோகிப்பவர்கள் முதல் 30 நிமிடங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications