மோடிகேர் முதல் இந்திராதனுஷ் வரை.. சுகாதாரத்துறையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சாதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்தியாவின் சுகாதாரத்துறையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு மிஷன் திட்டத்தின்கீழ், அதிகப்படியான மக்களை ஆரோக்கிய இன்சூரன்ஸ் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். மோடி கேர் என்ற இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

100 மில்லியன் ஏழை எளியவர்கள் இதனால் பயனடைவார்கள். இந்திராதனுஷ் திட்டத்தின்கீழ், 3.15 கோடி குழந்தைகள், 80 லட்சம் கர்ப்பிணி மகளிர், 528 மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அரசு சமீபத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. சமூகத்தின் நலிவு பிரிவினருக்கு இதனால் பலன் கிடைக்கும்.
மோடி கேரின் முக்கிய அம்சங்கள்:
- குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் ஒரு தடை இல்லை.
- சமூக பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தகுதி வாய்ந்த குடும்பங்கள் இந்த திட்டத்தில் தானாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
- மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தாலும், அந்த குடும்பத்தினர் பணம் செலுத்த தேவையில்லை.
- பாலிசி காலம் ஆரம்பிக்கும் முன்பாக இருக்கும் உடல்நல குறைபாடுகளும் இதில் இணைக்கப்படும்.
- மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பும் பின்புமான செலவுகள் இந்த பாலிசியில் அடங்கும்.
- அரசு மருத்துவனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனையில், இலவச சிகிச்சை பெற முடியும்
- பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்












Click it and Unblock the Notifications