மகளிர் மட்டும்... முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் முதல் ரயில்வே ஸ்டேசன்!
பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் காந்திநகர் ரயில் நிலையம் உள்ளது.
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம், இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் நிர்வாகம் செய்யும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது காந்திநகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டுதோரும் ஒரு பெண் ஊழியர் வீதம் புதிதாக நியமிக்கப்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த ரயில் நிலையத்தில் பணி புரிபவர்கள் அனைவருமே பெண்களாக உள்ளனர்.

தற்போது, அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர், ரயில் நிலைய பெண் கான்ஸ்டபிள், ரயில் நிலைய தலைவர் (ஸ்டேசன் மாஸ்டர்), டிக்கெட் முன்பதிவு கிளெர்க் உள்பட 32 பதவிகளிலுமே பெண் ஊழியர்களே பணி புரிந்து வருகின்றனர்.
இதனால், முற்றிலும் பெண் ஊழியர்களை மட்டும் கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை காந்திநகர் ரயில் நிலையம் பெற்றுள்ளது.
தினந்தோறும் சுமார் 50 ரயில்கள் வரும் இந்த ரயில் நிலையத்திற்கு சராசரியாக 7000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
மும்பையில் உள்ள மடுங்கா ரயில் நிலையமும் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் தான். ஆனாலும் அது புறநகர் ரயில் நிலையம் என்பதால் காந்திநகர் இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் பணிபுரியும் ரயில்நிலையம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவலர்கள் உட்பட அனைத்து பதவிகளிலும் பெண்களே உள்ளதால், பகல், இரவு என எப்போதும் பாதுகாப்பாக பயணம் செய்வதாக இங்கு வரும் பெண் பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications