ராணுவ வீரரின் மகள் குருமெஹரை கேலி செய்வது இழிவானதாகும்.. கம்பீர் காட்டம்
சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகன் குருமெஹர் கவுர். இவர் அண்மையில் தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை போர்தான் கொன்றது என்று அட்டையில் எழுதிக் காண்பித்து இந்திய நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பதை பதிவு செய்திருந்தார்.
இவரது இந்த நடவடிக்கைக்கு இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. சமூக வலைதளங்கள் முழுக்கப் பரவிய அந்தப் படத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வேறு பதில் வைத்திருந்தார்.

கிண்டல் செய்த ஷேவாக்
குருமேஹர் கௌர் எழுதிக் காண்பித்ததைப் போலவே ஒரு அட்டையில் இரண்டு முறையும் முச்சதங்கள் அடித்தது நான் அல்ல. என் பேட்தான் அதைச் செய்தது என்று குருமேஹர் கௌரின் என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. போர்தான் என்ற வாசகத்தை கிண்டல் செய்திருந்தார்.

வீடியோ வெளியிட்ட கம்பீர்
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகம் பேசாத கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இதற்கு கண்டம் தெரிவித்து பேசியிருக்கும் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் இருந்தது
அதில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் முழுமையாக இருந்தது. அதனை நாங்கள் கற்றோம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதனை செயல்படுத்தினோம்.

ராணுவத்தினரை மதிப்பவன்
குருமெஹர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர கேலி செய்யக்கூடா-து என்று கூறியுள்ளார். மேலும் தான் ராணுவத்தினரை மிகவும் மதிப்பவன் என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் தருகிறது
நாட்டுக்காகவும் நமக்காகவும் ராணுவத்தினர் செய்யும் சேவையை ஒப்பிட முடியாது. எனினும் சமீபத்திய நிகழ்வுகள் என ஏமாற்றத்தை தருகிறது.

சமாதான நோக்கில் கருத்து
கருத்து உரிமை உள்ள ஒரு சுதந்திர நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். தந்தையை இழந்த ஒரு மகள் சமாதான நோக்கில் போரின் கொடுமைகளை குறித்த பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.

கேலி செய்ய வாய்ப்பல்ல
மற்றவர்கள் தங்களின் தேசப்பற்றை காட்டவும் அவரை கும்பலாக சேர்ந்து கேலி செய்யவும் வாய்ப்பல்ல என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கேலி செய்வது இழிவானது
மற்ற குடிமக்களைப் போலவே குருமெஹரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனை அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களோ இல்லையோ கேலி செய்வது மிகவும் இழிவான ஒன்று. இவ்வாறு கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications