Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ வீரரின் மகள் குருமெஹரை கேலி செய்வது இழிவானதாகும்.. கம்பீர் காட்டம்

சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக வலைதளத்திதில் ராணுவ வீரரின் மகள் குருமெஹர் கவுர்க கேலி செய்யப்படுவதற்கு கிரிக்கெட் வீரர் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகன் குருமெஹர் கவுர். இவர் அண்மையில் தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை போர்தான் கொன்றது என்று அட்டையில் எழுதிக் காண்பித்து இந்திய நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டிருப்பதை பதிவு செய்திருந்தார்.

இவரது இந்த நடவடிக்கைக்கு இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. சமூக வலைதளங்கள் முழுக்கப் பரவிய அந்தப் படத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வேறு பதில் வைத்திருந்தார்.

கிண்டல் செய்த ஷேவாக்

கிண்டல் செய்த ஷேவாக்

குருமேஹர் கௌர் எழுதிக் காண்பித்ததைப் போலவே ஒரு அட்டையில் இரண்டு முறையும் முச்சதங்கள் அடித்தது நான் அல்ல. என் பேட்தான் அதைச் செய்தது என்று குருமேஹர் கௌரின் என் தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. போர்தான் என்ற வாசகத்தை கிண்டல் செய்திருந்தார்.

வீடியோ வெளியிட்ட கம்பீர்

வீடியோ வெளியிட்ட கம்பீர்

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகம் பேசாத கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இதற்கு கண்டம் தெரிவித்து பேசியிருக்கும் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்து சுதந்திரம் இருந்தது

கருத்து சுதந்திரம் இருந்தது

அதில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் முழுமையாக இருந்தது. அதனை நாங்கள் கற்றோம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அதனை செயல்படுத்தினோம்.

ராணுவத்தினரை மதிப்பவன்

ராணுவத்தினரை மதிப்பவன்

குருமெஹர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர கேலி செய்யக்கூடா-து என்று கூறியுள்ளார். மேலும் தான் ராணுவத்தினரை மிகவும் மதிப்பவன் என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் தருகிறது

ஏமாற்றம் தருகிறது

நாட்டுக்காகவும் நமக்காகவும் ராணுவத்தினர் செய்யும் சேவையை ஒப்பிட முடியாது. எனினும் சமீபத்திய நிகழ்வுகள் என ஏமாற்றத்தை தருகிறது.

சமாதான நோக்கில் கருத்து

சமாதான நோக்கில் கருத்து

கருத்து உரிமை உள்ள ஒரு சுதந்திர நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். தந்தையை இழந்த ஒரு மகள் சமாதான நோக்கில் போரின் கொடுமைகளை குறித்த பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.

கேலி செய்ய வாய்ப்பல்ல

கேலி செய்ய வாய்ப்பல்ல

மற்றவர்கள் தங்களின் தேசப்பற்றை காட்டவும் அவரை கும்பலாக சேர்ந்து கேலி செய்யவும் வாய்ப்பல்ல என்றும் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கேலி செய்வது இழிவானது

கேலி செய்வது இழிவானது

மற்ற குடிமக்களைப் போலவே குருமெஹரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனை அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களோ இல்லையோ கேலி செய்வது மிகவும் இழிவான ஒன்று. இவ்வாறு கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+