பாகிஸ்தானுக்கு ஓடிப் போக சொன்ன பாஜகவின் கிரிராஜ்சிங்குக்கு முன் ஜாமீன் கிடைத்தது!
பாட்னா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்குக்கு பாட்னா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை.. அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.

கிரிராஜ்சிங் மீது அடுத்தடுத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அவரை கைது செய்யவும் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும் கிரிராஜ்சிங் பிரசராம் செய்ய தேர்தல் ஆணையமும் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் மும்முரம் காட்டினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கிரிராஜ்சிங் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி பாட்னா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கிரிராஜ்சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications