வீட்டில் இருந்து சோறு பொங்கச் சொன்ன வருங்கால கணவரை டர்ர்ராக்கிய பெண்: வீடியோ இதோ
டெல்லி: திருமணம் செய்வது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் ஆணின் குணத்தை புரிந்து கொண்ட பெண் அவருக்கு நச்சென்று பதில் அளித்த வீடியோ தீயாக பரவியுள்ளது.
திருமணத்திற்காக பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்கள். ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அந்த ஆண் தனக்கு வரும் மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என்கிறார்.
அதற்கு அந்த பெண் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்று பதில் அளிக்கும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. வீடியோவின் விபரம் வருமாறு,
ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் காபி கடையில் சந்திக்கிறார்கள். அப்போது அந்த நபர் தனக்கு வரும் மனைவி வேலைக்கு செல்லக் கூடாது வீட்டில் தான் இருக்க வேண்டும் என்கிறார். அந்த பெண்ணோ தனக்கு அண்மையில் புரமோஷன் கிடைத்ததாகவும், தொடர்ந்து பணிபுரிய விரும்புவதாகவும் கூறுகிறார். வீட்டில் இருந்து தான் என்ன செய்வேன் என்றும் கேட்கிறார்.
அதற்கு அந்த நபர் நான், என் அப்பா, அண்ணன் ஆகியோர் நன்றாக சம்பாதிக்கிறோம். அதனால் நீ வேலைக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து என் தாய்க்கு உதவி செய் என்கிறார். இதனால் கடுப்பான அந்த பெண் கூறுகையில்,
எனக்கு டர்ர் விடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அது தான் என் பொழுதுபோக்கு. சத்தமாக விடப் பிடிக்கும், ஆனால் நாத்தமாக விடப் பிடிக்காது. அலுவலகத்தில் கூட நான் சத்தமாக டர்ர் விடுவதை பார்த்து பலரும் உங்களை போன்றே முகம் சுளிப்பார்கள். வீட்டில் உங்களின் தாய், அண்ணி, அண்ணன், தந்தை டர்ர் விடுவதை கேட்டது இல்லையா? எனக்கு நாத்தமான டர்ர்ரை பிடிக்காது, நீ தான் அது முட்டாளே என்று கூறிவிட்டு செல்கிறார்.












Click it and Unblock the Notifications