உ.பி.: திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
Subscribe to Oneindia Tamil
பஸ்தி: உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பத்னி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. அவர் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் தர்மேந்திரா மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண் தன்னை மணக்க மறுத்த தர்மேந்திரா மீது ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த தர்மேந்திரா பஸ்தி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications