கலி முத்திப்போச்சு... கல்யாணம் கட்டிக்க ஓடிப்போன லெஸ்பியன் சிறுமிகள்
ராய்ப்பூர்: திருமணம் செய்வதற்காக லெஸ்பியன் சிறுமிகள் இருவர் வீட்டைவிட்டு ஓடிப்போன சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகள் சிறுவயது முதலே தோழிகளாம். இரு வாரங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியே சென்ற 15 வயது சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவளது பெற்றோர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரிக்க தொடங்கியபோதுதான், காணாமல்போனதாக கூறப்படும் சிறுமியின், சிறுவயது தோழியும் மாயமானது தெரியவந்தது.
ஒருவழியாக காணாமல்போன இருவரையும் அருகேயுள்ள சிறு நகரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சிறுமிகள் கூறியுள்ளதாவது:
நாங்கள் இருவரும் குழந்தையாக இருந்தபோது முதல் தோழிகள். பெரியவர்களானதும் எங்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. ஒருவரை விட்டு மற்றொருவரால் பிரிந்து இருக்க முடியாத மனநிலைக்கு வந்தோம். இருவரும் திருமணம் செய்து கொண்டால்தான் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருக்க முடியும் என்றும் முடிவு செய்தோம்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது எங்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அவர்களால் நாங்கள் அருவருப்பாக பார்க்கப்பட்டோம். சித்ரவதைகளுக்கு உள்ளானோம். எங்களை சந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தடுத்தனர். எனவேதான் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இவ்வாறு சிறுமிகள் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
வழக்கை பரிசீலித்த போலீசார் இருவருக்குமே சட்டப்படியான திருமண வயது வரவில்லை என்பதை கருத்தில் கொண்டு அவர்களை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க தீர்மானித்தனர். ஆனால் மீண்டும் வீட்டைவிட்டு இருவரும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக மன நல மருத்துவர்களை கொண்டு கவுன்சலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications