ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கொடுங்கள்.. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மலையாளிகள் வழக்கு
கேரளா வெள்ளத்தின் போது மலையாளிகளை அவமானப்படுத்தியதாக செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தின் போது மலையாளிகளை அவமானப்படுத்தியதாக செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பிரபல செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரி பேசினார்
கேரளா வெள்ளம் குறித்த விவாதத்தில், பேசிய போது, வடஇந்திய செய்தியாளாரும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மலையாளிகளுக்கு எதிராக கடுமையாக பேசினார். அதில் ''இந்தியாவில் மலையாளிகளை போல மோசமான நபர்களை பார்த்தது இல்லை. உலகிலேயே மிகவும் மோசமான குணம் கொண்டவர்கள் அவர்கள். இந்தியாவிற்கு எதிராக பேசுவதுதான் அவர்களின் பணி. அவர்கள் இதற்காக அனுபவிக்கிறார்கள்'' என்று கொஞ்சம் கூட மனித தன்மை இல்லாமல் பேசி இருந்தார்.

கொந்தளிப்பு
ஏற்கனவே பல முறை அவர் மலையாளிகளுக்கு எதிராக இப்படி பேசியுள்ளார். இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து அவர் இப்படி பேசியது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளா மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
தற்போது, கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி. சசி, அர்னாப் கோஸ்வாமி அவரது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார் .தொலைக்காட்சியில் மோசமாக பேசிய அவர், தொலைக்காட்சியிலேயே இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் அவர் உறுதியளிக்க வேண்டும் என்றுள்ளார்.

வழக்கு தொடுக்கப்படும்
மேலும், கேரளா மக்களை அவமானப்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். இந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால், தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி பல வழக்குகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications