மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: கோவாவில் இளைஞர் சிறைக்கு போகிறார்
பனாஜி: பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்த இளைஞர் ஒருவர் கோவா போலீசாரால் கைது செய்யப்பட இருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்தவர் தேவு சோடன்கர். டிப்ளமா பட்டதாரியான இவர் மும்பையில் பணிபுரிந்து வருகிறார். லோக்சபா தேர்தலின் போது நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளைப் போட்டிருக்கிறார். மேலும் மோடிக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவா போலீஸில் மோடி ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சோடன்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி சோடன்கர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications