Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாண பார்ட்டின்னு சொன்னதுமே.. பாரீன்ல இருந்தெல்லாம் வந்த போன் கால்.. அதிர்ச்சியான இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நிர்வாணா பார்ட்டி போஸ்டர் ஒட்டிய இளைஞர்..விசாரணையில் அதிர்ச்சி தகவல்-வீடியோ

    டெல்லி: "நிர்வாண பார்ட்டி"ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டினதுமே.. ஃபாரீன்ல இருந்தெல்லாம் போன் வர ஆரம்பிச்சிடுச்சு.. அதனால என் போனை ஸ்விட்ச் ஆப் செய்துட்டேன்" என்று கைதான இளைஞர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.

    "என்ஜாய்" என்ற பெயரில் கோவாவில் நடக்கும் கூத்துகள் எக்கச்சக்கம். அதனால்தான் எந்நேரமும் இங்கு கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். இருக்கிற கூத்து பத்தாது என்று ஒரு போஸ்டரை இங்கு வந்து போன வாரம் யாரோ ஒட்டி இருந்தனர்.

    கோவாவின் வடக்கு பகுதியில் நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும், 10-15 வெளிநாட்டு பெண்களுடன் 10-க்கும் மேற்பட்ட இந்திய பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பார்ட்டி எங்கே நடக்க போகிறது, எப்போது நடக்க போகிறது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை.

    போஸ்டர்

    போஸ்டர்

    "நிர்வாண பார்ட்டி" என்றதுமே இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் மிக வேகமாக வைரலாக தொடங்கியது. இந்த பரபரப்பு போஸ்டர் விவகாரம், கோவா மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரதிமா வரை சென்றுவிட்டது. ''இந்த விவகாரத்தில், முதல்வர் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,'' என பிரதிமா வேண்டுகோள் விடுத்தார்.

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    இதையடுத்து, மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் "இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு விடுத்தனர். இதன்பிறகு போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி, போஸ்டர் வேலையை செய்தது யார் என்ற விசாரணையை கையில் எடுத்தனர். அதன்படியே போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞரை கைது செய்துள்ளனர்.

    ஐடியா

    ஐடியா

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொன்னதாவது: ''படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். கையில பணம் இல்லை.. என்ன செய்றதுன்னு தெரியல. அதனால பணம் சம்பாதிக்க ஐடியா பண்ணினேன். அப்பதான் இந்த நிர்வாண பார்ட்டி யோசனை வந்தது.

    அட்வான்ஸ்

    அட்வான்ஸ்

    இன்டர்நெட்டில் இருந்து சில போட்டோக்களை எடுத்து இந்த போஸ்டரை ரெடி பண்ணேன். இதற்கு அட்வான்ஸ் வாங்கி கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். அப்படி அட்வான்ஸ் பணம் கிடைத்தால், அதை எடுத்து கொண்டு ஓடிவிடலாம் என்பதுதான் என் பிளான்.

    கைது

    கைது

    ஆனால் நானே எதிர்பாராத வகையில், ஏகப்பட்ட போன்கள் எனக்கு வர ஆரம்பித்தன. ஃபாரீன்ல இருந்து கூட போன் வந்தது. அதனால நான் பயந்துட்டேன். போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துட்டேன். இது பற்றி போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே நான் இன்னும் பயந்துட்டேன். கொஞ்ச நாள் ஆற போடலாம்னு விட்டுட்டு, இப்பதான் போனை ஆன் பண்ணேன். ஆனால் போலீசார் அதை வைத்து என்னை பிடித்து விட்டார்கள்" என்றார். இதையடுத்து, தொடர்ந்து இளைஞனிடம் விசாரணை நடந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+