நள்ளிரவில் பேரதிர்ச்சி.. கோவா நைட் கிளப்பில் மிக மோசமான தீ விபத்து! 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பார்ட்டி நகரம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கோவா தான்.. உலகெங்கும் இருந்து கூட பல்வேறு சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வருகை தருவது வழக்கம். அந்தளவுக்குத் தரமான ஒரு பார்ட்டி லைப்பை கொண்ட இடமாகக் கோவா இருந்து வருகிறது. இதனால் அங்கு விடிய விடிய, குறிப்பாக வார இறுதி நாட்களில், பார்டி இருக்கும்.

தீ விபத்து
அப்படி அங்கு பார்டி நடந்த ஒரு நைட் கிளப்பில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்போரா என்ற பகுதியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' (Birch by Romeo Lane) என்ற நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவு பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர். கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த நைட் கிளப்பில் வேலை செய்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தவிர நான்கு சுற்றுலாப் பயணிகளும் இதில் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கோவா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சமையலறைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட ஒரு கேஸ் சிலிண்டர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும், விபத்திற்கான காரணம் இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை.
இந்த வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சில வினாடிகளிலேயே தீ மொத்தக் கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டன. இதனால் உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க மிகக் குறைந்த நேரமே கிடைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நைட் கிளப் மூடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
கோவா முதல்வர்
இது தொடர்பாகக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டரில், "ஆர்ப்போராவில் நடந்த மோசமான தீ விபத்து குறித்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய காரணம்
தீ விபத்து காரணமாகப் புகை கிளம்பிய நிலையில், அதில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நைட் கிளப் உரிமையாளர் மற்றும் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தோரில் பெரும்பாலானோரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications