For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் சாமியார் கொண்டாட்டம்- மணமகனின் அத்தை பலி!

ஹரியானாவில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட பெண் சாமியார் துப்பாக்கியால் சுட்டு ஆட்டம்போட்டத்தில் மணமகனின் அத்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

சண்டிகர் : ஹரியானாவின் கர்னல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பெண் சாமியார் ஒருவர்த னது மகிழ்ச்சியை வெளிப்படுத்த துப்பாக்கியால் சுட்டதில் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியானார்.

கர்னலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாக்கூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். துப்பாக்கி பிரியையான இந்த பெண் சாமியார் தனது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் திருமண மண்டபத்துக்கு வந்தார்.

'God woman' on shooting at a wedding kills groom's aunt

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருமண வீட்டார் நடனமாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்ற பெண் சாமியார் தனது ஆதரவாளர்களுடன் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஆட்டம் போட்டார். ஆனால் துப்பாக்கி குண்டுகள் அங்கு நடனமாடியவர்கள் மீது பாய்ந்ததில் மணமகனின் அத்தை அங்கேயே உயிரிழந்தார். படுகாயாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடந்ததை உணர்ந்த பெண் சாமியார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதரவாளர்களுடன் தப்பி ஓடிவிட்டார். பெண் சாமியார் மீது கொலை மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காவி உடையணிந்துள்ள இந்த சாமியார் தங்கத்தால் உருவாக்கப்பட்ட டர்பனை தலையில் அணிந்துள்ளார். நவீன சாமியார் என கூறிக்கொள்ளும் இவர் எங்கே சென்றாலும் துப்பாக்கியை கையில் கொண்டு செல்வது வழக்கமாம்.

English summary
God woman and her guards went on shooting spree at a wedding groom's aunt died, 3 persons critically wounded
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X