பெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும், நாணயங்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. வளையல், மூக்குத்தி, தோடு, கடிகாரம் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பெண்ணின் வயிற்றில் இருந்ததை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

26 வயதான அந்த பெண்ணிற்கு மனதளவில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போல, மாமாவின் நகைக்கடையில் இருந்து நகைகள் காணமல் போனதாக விசாரிக்கும் போதே அந்த பெண் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாராம். அப்புறம்தான் வயிற்றுவலியால் துடித்துள்ளார். ராம்புரத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அதிர்ந்துதான் போனார்கள்.
வயிற்றில் கிலோ கணக்கில் நகைகள் இருந்தன. அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். வரிசையாக வளையல்கள், மூக்குத்திகள், செயின், மோதிரம், கடிகாரம் என வரிசையாக எடுத்துப்போட்டனர். கூடவே 5 ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களும் இருந்தன. தங்கம் மட்டுமல்லாது செம்பு, பித்தளையால் ஆன நகைகளும் இருந்தன.
ஒருவழியாக அத்தனை பொருட்களையும் ஆபரேசன் செய்து எடுத்தனர். மொத்த நகைகளின் மதிப்பு ஒன்றரை கிலோ என்று மருத்துவர்கள் கூறினர்.
90 நாணயங்களும் அகற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ஏன் இந்த பெண்ணின் வயிற்றில் இத்தனை பொருட்கள் இருக்கின்றன என்று அவரது அம்மாவிடம் கேட்டதற்கு, எனது மகளுக்கு மனநலம் சரியில்லை, சகோதரரின் கடையில் இருந்து ஆபரணங்களை எடுத்து சாப்பிட்டிருக்கலாம் என்று கூறினார். காணாமல் போனதாக தேடப்பட்ட நகைகள் பெண்ணின் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பிர்பும் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications