பொதுமக்களுக்கு ஒரு ‘பிரைட்’ நியூஸ்... எல்.இ.டி. விளக்குகளை ரூ. 44க்கு விற்க மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுமக்களுக்கு ரூ. 44 விலையில் எல்.இ.டி. விளக்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எல்.இ.டி. விளக்குகள் தற்போது சந்தையில் ரூ. 300 வரை விற்பனை செய்யப் படுகிறது. இவற்றின் மூலம் மின்சாரம் சேமிக்க முடியும் என்ற போதும், விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்கத் தயங்குகின்றனர்.

எனவே, மக்களின் நலன் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதைக் கருத்தில் கொண்டு எல்.இ.டி விளக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து ரூ. 44க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

மொத்தமாக கொள்முதல்...

மொத்தமாக கொள்முதல்...

சந்தையில் தற்போது எல்.இ.டி. விளக்குகள் சராசரியாக ரூ. 300 விலையில் விற்கப்படுகிறது. வீட்டு மின் விளக்கு திட்டத்தில் (டி.இ.எல்.பி.) டெண்டர் மூலம் மொத்தமாக எல்.இ.டி. விளக்குகளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு ரூ.44 விலையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறோம்.

மின் சேமிப்பு...

மின் சேமிப்பு...

எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நாடு முழுவதும்...

நாடு முழுவதும்...

தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப் படும் 77 கோடி மின் விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டால் ஆண்டுக்கு 2500 கோடி கிலோ வாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனவரியில் தொடங்கப்பட்ட திட்டம்...

ஜனவரியில் தொடங்கப்பட்ட திட்டம்...

இந்த தேசிய திட்டமானது கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 1.35 கோடி எல்.இ.டி. விளக்குகள் விநியோகிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+