டிரைவர் இல்லாமல் 1 கி.மீ. தூரத்துக்கு தானாக ஓடிய சரக்கு ரயில்: 4 பேர் சஸ்பெண்ட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜாக்கிரதையாக இருந்த 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், தவ்சா மாவட்டத்தில் உள்ள பாங்க்ரி என்ற ரயில் நிலையத்தில் நேற்று ஒரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சரக்கு ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமலேயே கிளம்பி ரயில் நிலையத்தைத் தாண்டி 1 கிமீ தூரம் வரை சென்றது.

ஊழியர்களின் கவனக்குறைவே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்திற்கு காரணமதன ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் கே.பி.மீனா, ஓட்டுனர் பிரிஜ்பிஹாரி, கார்டு ரமேஷ் சந்த், உதவி ஓட்டுனர் மான்சிங் ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும் சரக்கு ரயில் தானாக ஓடியது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications