மாரடைப்பும், கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் ரத்தம் வீணானதும் முண்டே மரணத்துக்குக் காரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கியதும் அவரது கல்லீரல் சேதம் அடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் விபத்து குறித்த தகவல்களை பார்ப்போம்.

அத்வானி

அத்வானி

முண்டே சென்ற கார் மோதி பாக் அருகே டாடா இன்டிகா காருடன் மோதியது. இந்த விபத்து பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீடு அருகே நடந்தது.

பின் சீட்

பின் சீட்

கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்.

காயம்

காயம்

விபத்தில் முண்டேவின் மூக்கில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.

மாரடைப்பு

மாரடைப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கல்லீரல்

கல்லீரல்

விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+