பட்ஜெட்டில் கங்கையை தூய்மைப்படுத்த மட்டும் ரூ.2,037 கோடி ப்ளஸ் என்.ஆர்.ஐ. நிதி!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்த மட்டும் ரூ2037 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் கங்கை தூய்மைப்படுத்துதலுக்கு நிதி பெறப்படும் என்றும் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது கங்கையை தூய்மைபடுத்த தனியே அமைச்சகத்தை உருவாக்கினார். அதன் அமைச்சராக உமாபாரதி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, நாட்டின் நதிகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்ய ரூ100 கோடி ஒதுக்கப்படும்.
கங்கை நதி தூய்மைக்கு மட்டும் ரூ2037 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் (என்.ஆர்.ஐ) இதற்கான நிதி பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications