கெஜ்ரிவால் கட்சிக்கான நிதி குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
டெல்லி: அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி எங்கே இருந்து கிடைக்கிறது என்பது விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியும் பதிலளித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கான நிதி விவரங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார்.

இதனிடையே இந்த விசாரணையை தமது கட்சி எதிர்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சி பதிலளித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கான நிதி எங்கே இருந்து வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் கொடுக்கின்றனர்.. அதனாலேயே அது வெளிநாட்டு பணம் என்றாகிவிடாது என்பதும் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலர் பங்கஜ் குப்தா கூறுகையில், 63 ஆயிரம் தனிநபர்களிடம் இருந்து ரூ19 கோடி வசூலித்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications