மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசின் போராட்டம்.. டிஜிபியிடம் கேட்டறிந்த மேற்கு வங்க ஆளுநர்
Recommended Video

கொல்கத்தா: மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தி வருவது குறித்து மாநிலத்தின் டிஜிபியிடம் மேற்கு வங்க ஆளுநர் கே என் திரிபாதி கேட்டறிந்தார்.
சாரதா நிதி நிறுவன வழக்கு விசாரணை தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அதற்கு அங்கிருந்த போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து 15 சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் தொடர்பாக ஆளுநர் கே என் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் கே என் திரிபாதி தனியார் தொலைகாட்சிக்கு கூறுகையில் மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலைமையை கேட்டறிந்தேன்.
மேற்கு வங்கத்தின் நிலையை தலைமைச் செயலாளர், மாநில டிஜிபியிடம் ஆளுநர் கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆளுநரை சந்திக்க சிபிஐ அதிகாரிகள் நேரம் கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications