அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்: அருண் ஜேட்லி
அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக பொறுப்பு ஆளுநர் அரசமைக்க நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் பிளவுபட்டு கிடக்கிறது. இரு தரப்பும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த குழப்பமான சூழ்நிலையில் இன்று மீ்ண்டும் இருதரப்பினரும் ஆளுநரை சந்தித்தனர். ஆனால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "அரசியல் அமைப்பு சட்டப்படி அரசமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications