ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இப்படி வேலை பார்க்க வேண்டும்... சேவை விதிகள் அதிரடி மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது பணிக்காலத்தின்போது நேர்மையாகவும், உயரிய நெறிகளுடனும், அரசியல் நடுநிலையுடனும் செயல்படும் வகையில் மத்திய அரசு பல சேவை விதிகளை மாற்றியமைத்துள்ளது.
மக்களுக்கு குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் இவர்கள் பணியாற்ற வேண்டும். பொதுமக்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். முடிவுகளை பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சுதந்திரமாக எடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
இதுதொடர்பாக அகில இந்திய சேவை (நடத்தை) திருத்த விதிகள் 2014-ஐ, மத்திய அரசின் பெர்சனல் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
- அதில் உள்ள விதிமுறைகளை அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பிரச்சினைகள், மோதல்களின்போது பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டே அதிகாரிகள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் விதிமுறை கூறுகிறது.
- யாருடைய அல்லது எந்த நிறுவனத்தினுடைய பண ஆசைக்கும், பிற ஆசைகளுக்கும் அதிகாரிகள் பணிந்து போகக் கூடாது என்றும், இதன் மூலம் யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் அடி பணியக் கூடாது என்றும் விதிமுறைகள் சொல்கின்றன.
- தாங்கள் அரசுப் பணியாளர் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், முடிவுகளை எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தங்களுக்கும் சாதகமாக எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
- தங்களது பணிக்காலத்தின்போது அரசுத் தகவல்களை மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நாட்டின்பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார நலன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் பாதுகாப்பாக பத்திரமாக பாதுகாக வேண்டும் என்றும், யாருக்கும் சாதகமாக இதில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications