விரைவில் வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்.. மத்திய அரசு திட்டம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை விரைவில் அச்சடிக்க உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹோஷிங்காபாத் பாதுகாப்பு பேப்பர் மூலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.100 நோட்டில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications