குஜராத்தில் பெண்ணை உளவு பார்த்தது குறித்து விரைவில் விசாரணை கமிஷன்: ஷிண்டே
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவரை அம்மாநில காவல்துறையினர் உளவு பார்த்தது விவகாரத்தில் விரைவில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இளம்பெண் ஒருவரை குஜராத் காவல்துறையினர் உளவு பார்த்ததாக கோப்ரா போஸ்ட் என்ற இணையதளம் தகவல் வெளியிட்டது. அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, தமது சாகிபுக்காக அப்பெண்ண உளவு பார்த்ததாக கூறப்பட்டது.

இதில் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபட்டது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுகில்குமார் ஷிண்டே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி பல தொண்டு அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளனர்.
அவரது பரிந்துரையின் பேரில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது எந்தக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தால் இதுதொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications