பெங்களூரில் கட்சியின் புதிய அலுவலகத்திற்கு ரகசியமாக பூஜை நடத்திய தேவே கவுடா
பெங்களூர்: பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக ரகசியமாக பூஜை நடத்தியுள்ளார் அக்கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் முக்கிய இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு அக்கட்சிக்கு உத்தரவிட்டு அவர்களை வெளியேற்றியது.

இந்நிலையில் பெங்களூரில் அந்த கட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட இன்று அதிகாலை ரகசிய பூஜை நடந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூஜையில் அவரது மகனும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி. ரேவண்ணா கலந்து கொண்டார். ஆனால் தேவே கவுடாவின் மற்றொரு மகனும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கலந்து கொள்ளவில்லை.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ள தேவே கவுடா தனது ஆஸ்தான ஜோதிரடர்களின் அறிவுரைப்படியே இந்த பூஜையை நடத்தியுள்ளார். புதிய கட்டிடத்திற்கு ஜே.பி. பவன் என்று பெயர் வைக்க உள்ளார்கள்.
தேவே கவுடா ஜெயபிரகாஷ் நாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார். அதனால் அவர் நினைவாக கட்டிடத்திற்கு ஜே.பி. பவன் என்று பெயர் வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications