இன்னும் 35 வருடங்களில் இந்தியா குடிநீரை இறக்குமதி செய்யும் நிலை வரலாம்: ஆய்வில் அதிர்ச்சி
மும்பை: இன்னும் 35 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகள் இறக்குமதி குடிநீரை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்று எச்சரிக்கிறது ஆய்வு ஒன்று.
1951ம் ஆண்டில், இந்தியாவில் ஒரு நபருக்கு 14 ஆயிரத்து 180 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. 2001ம் ஆண்டில் இது 5 ஆயிரத்து 120 என்ற அளவுக்கு சரிவடைந்துள்ளது.

இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால், 1951ம் ஆண்டில் கிடைத்த நீரில் 25 சதவீதம் அளவுக்குதான், 2025ம் ஆண்டு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் இதத்தகவல் தெரியவந்துள்ளது.
2050ம் ஆண்டு இது, 22 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது. ஏரி, குளங்களை தூர் வாராமல் மழை நீரை வீணாக கடலில் சென்று சேர விட்டுள்ளது, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மழையை பொய்த்து போக செய்யும் வகையில் மரங்களை வெட்டுவது போன்றவை இந்த ஆபத்துக்கு காரணங்கள் என பட்டியலிடுகிறது அந்த ஆய்வு.












Click it and Unblock the Notifications