ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களின் இறையாண்மையை பறிக்காது: ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பின் 122வது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான முன் மொழிவையும் ஜேட்லி முன்வைத்தார்.

GST Bill will empower the states, says FM Jaitley

மசோதாவை அறிமுகம் செய்து ஜேட்லி பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாநிலங்களின் இறையாண்மையை பறிப்பதாகாது. மாநிலங்கள் ஆலோசனையை ஏற்று, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மசோதாவை அமல் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜிஎஸ்டி சட்டம் நிறைவேறினால் வரி ஏய்ப்பு இயலாதது ஆகிவிடும். புதிய வரி விதிப்பு முறையால் மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். வரி மீது வரி விதிக்கும் நடைமுறை போய்விடும்.

சீரான பொருளாதார மார்க்கெட்டாக இந்தியாவை மாற்றம் செய்ய இந்த மசோதா உதவும். ஜிஎஸ்டி கவுன்சிலில் 3ல் 2 பங்கு வாக்கு மாநில அரசுகளிடம்தான் இருக்கும். மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

இதன்பிறகு விவாதம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+