ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களின் இறையாண்மையை பறிக்காது: ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி உறுதி
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பின் 122வது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான முன் மொழிவையும் ஜேட்லி முன்வைத்தார்.

மசோதாவை அறிமுகம் செய்து ஜேட்லி பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாநிலங்களின் இறையாண்மையை பறிப்பதாகாது. மாநிலங்கள் ஆலோசனையை ஏற்று, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவை அமல் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டம் நிறைவேறினால் வரி ஏய்ப்பு இயலாதது ஆகிவிடும். புதிய வரி விதிப்பு முறையால் மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். வரி மீது வரி விதிக்கும் நடைமுறை போய்விடும்.
சீரான பொருளாதார மார்க்கெட்டாக இந்தியாவை மாற்றம் செய்ய இந்த மசோதா உதவும். ஜிஎஸ்டி கவுன்சிலில் 3ல் 2 பங்கு வாக்கு மாநில அரசுகளிடம்தான் இருக்கும். மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
இதன்பிறகு விவாதம் நடைபெற்றது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications