ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களின் இறையாண்மையை பறிக்காது: ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி உறுதி
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பின் 122வது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான முன் மொழிவையும் ஜேட்லி முன்வைத்தார்.

மசோதாவை அறிமுகம் செய்து ஜேட்லி பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாநிலங்களின் இறையாண்மையை பறிப்பதாகாது. மாநிலங்கள் ஆலோசனையை ஏற்று, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மசோதாவை அமல் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டம் நிறைவேறினால் வரி ஏய்ப்பு இயலாதது ஆகிவிடும். புதிய வரி விதிப்பு முறையால் மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். வரி மீது வரி விதிக்கும் நடைமுறை போய்விடும்.
சீரான பொருளாதார மார்க்கெட்டாக இந்தியாவை மாற்றம் செய்ய இந்த மசோதா உதவும். ஜிஎஸ்டி கவுன்சிலில் 3ல் 2 பங்கு வாக்கு மாநில அரசுகளிடம்தான் இருக்கும். மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமை மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
இதன்பிறகு விவாதம் நடைபெற்றது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications