For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரகசிய உறவா.. விதவை பெண்ணின் டிரஸ்ஸை கிழித்து.. மொட்டையடித்து.. ஒரே அட்டகாசம்.. 6 பேர் கைது

விதவை பெண்ணை தாக்கிய நபர்கள் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

காந்திநகர்: பெண்ணின் டிரஸ்ஸை கிழித்து, அவரது தலையை மொட்டையடித்து பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம் சஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பெண் அவர்.. 30 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. அதனால் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த ஜூலை 30-ம் தேதி, ஹிம்மதுநகரில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.. சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருந்ததால், 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்றிருந்தார்..

ஆடிப்பூரம் விழா சிவா, விஷ்ணு ஆலயங்களில் கொடியேற்றம் கோலாகலம் - தங்கத்தேரில் உலா வரும் ஆண்டாள்ஆடிப்பூரம் விழா சிவா, விஷ்ணு ஆலயங்களில் கொடியேற்றம் கோலாகலம் - தங்கத்தேரில் உலா வரும் ஆண்டாள்

குழந்தைகள்

குழந்தைகள்

பாங்கில் வேலை முடிந்ததும் கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.. அப்போது வெயில் அதிகமாக இருந்தது. குழந்தைகளுடன் அந்த பெண் வெயிலில் நடந்து வருவதை கவனித்த, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் பரிதாபப்பட்டு லிப்ட் தந்துள்ளார்.. அந்த விதவை பெண்ணும், குழந்தைகளுக்காக அந்த பைக்கில் ஏறி கொண்டார்..

 கிராமம்

கிராமம்

கிராமத்தின் எல்லையில் பைக் வந்தபோது, 4 பேர் இதை பார்த்துவிட்டனர்.. அப்போது பைக்கை வழிமறித்து 2 பேரையும் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். விதவை பெண்ணுக்கு எப்படி லிப்ட் தரலாம் என்று கேட்டு, இருவருக்கும் தவறான உறவு இருப்பதாக சொல்லி தாக்கி உள்ளனர்.. இப்படி தாக்கியவர்களில் ஒருவர், லிப்ட் கொடுத்த நபரின், சொந்த மச்சான் என்று கூறப்படுகிறது..

மொட்டை

மொட்டை

எத்தனை நாட்களாக அந்த பெண்ணுடன் ரகசிய உறவு இருக்கிறது என்ற கேட்டு அந்த நபரை அடித்து நொறுக்கினர். அதேபோல, அந்த பெண்ணின் டிரஸ்ஸை அங்கேயே கிழித்தனர்.. அவரது தலையை மொட்டையடித்து, கிராம மக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர்... இனி உங்க 2 பேரையும் சேர்ந்து பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து விட்டு சென்றனர்..

விசாரணை

விசாரணை

நடந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. இறுதியில் 2 பேரையும் தாக்கிய அந்த கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
Gujarat Widow threatened over alleged illegal relationship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X