முன்னாள் மிஸ் இந்தியா குல்பனாக்! ஆம் ஆத்மி வேட்பாளரானார்
டெல்லி: சண்டிகார் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் 'மிஸ் இந்தியா' குல்பனாக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மறைந்த நடிகர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா பட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அந்த தொகுதியில் 1999ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி குல்பனாக், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குல்பனாக், ஆம் ஆம்தி கட்சியை நிறுவியர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எச்.எஸ்.பனாக்கின் மகள் ஆவார். மேலும், குல்பனாக் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 35 வயதான நடிகை குல்பனாக் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன்குமார் பன்சால். காங்கிரஸ் ஆட்சியில் 3 முறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சண்டிகார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குல்பனாக் களமிறக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications