உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்
உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்- காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ
பெங்களூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்- காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

இதனிடையே தங்களுக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளதால் தங்களை தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்-காங்கிரஸை அழைக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஆளுநர் புறக்கணிக்கக் கூடாது. எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேச அனுமதிக்கவும் கூடாது. ஜேடிஎஸ்- காங். கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications