ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை: கேரளா முதல்வர் உம்மன் சாண்டி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை நியமிப்பது குறித்து தம்மிடம் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
கேரளாவின் ஆளுநராக முன்னால் தலைமை நீதிபதி சதாசிவத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது .இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பொதுவாக ஆளுநர்கள் நியமனம் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்கும். இதுவரை மத்திய அரசு புதிய ஆளுநர் நியமனம் குறித்து ஆலோசிக்கவில்லை.
மத்திய அரசு எங்களிடம் விரைவில் ஆலோசனை கேட்கும் என நம்புகிறேன். அப்போது மாநில அரசின் நிலை தெரிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications