குழந்தையுடன் வரும் பிச்சைகாரர்களுக்கு டிஎன்ஏ சோதனை- குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை!
பெங்களூரு: குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுப்பவர்களை கண்டுபிடிக்க டி.என்.ஏ சோதனைகளை தொடங்கியுள்ளது பெங்களூரு போலீஸ். 'ஆபரேசன் ஸ்மைல்' என்ற பெயரிலான இந்த நடவடிக்கையின்போது குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண்ணின் மரபணுவுடன், குழந்தையின் மரபணு ஒத்துப்போகவில்லை என்றால், அந்த பிச்சைக்கார பெண்மணி கம்பி எண்ண வேண்டியது கட்டாயம்.
சிக்னல்களில் குழந்தைகளை காட்டி பிச்சை எடுப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் 'தொழில் தந்திரம்'. குழந்தைகளை பார்த்து பரிதாபப்பட்டு பிச்சை போடுவார்கள் என்ற எண்ணத்தில் குழந்தைகளை கடத்தி வந்தும் பிச்சையில் ஈடுபடுத்துவோர் உள்ளனர்.

பிச்சைக்கு பின்னணியில் மாஃபியா
பெங்களூரை பொறுத்தளவில், குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க பயன்படுத்துவதன் பின்னணியில் ஒரு மாஃபியா கும்பல் இருப்பது அம்பலமாகியுள்ளது. காலை முதல் மாலை வரை பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களிடமிருந்து அந்த மாஃபியா பணத்தை பறித்துவிட்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வாடகையாக கொடுத்து வருகிறது.

குழந்தைகள் கடத்தல்
பிச்சை எடுப்பது மட்டுமே பிச்சைக்காரர்கள் வேலை. குழந்தையை ஆஸ்பத்திரிகைகளில் இருந்தோ, வீடுகளில் இருந்தோ கடத்துவது மாஃபியாக்களின் வேலை. இதற்காகவே பிச்சையில் கிடைக்கும் பெரும்பகுதி பணத்தை இந்த மாஃபியாக்கள் எடுத்துக்கொள்கின்றன.

ஆபரேசன் ஸ்மைல்
மற்றொரு பக்கம் பத்துமாதம் சுமந்து, பாடுபட்டு பெற்ற பிள்ளை காணாமல் போய்விட்டதால் பதறி துடிக்கும் பெண்கள் ஏராளம். இந்த மாஃபியா கும்பல் பிற மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுக்கச் செய்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக பெங்களூரு போலீசார் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் ஆபரேசன் ஸ்மைல்.

பல சட்டங்கள் பாயும்
முதல்கட்டமாக 500 பிச்சைக்காரர்களிடமும், அவர்கள் வைத்திருக்கும் குழந்தைகளிடமும் மரபணு சோதனையை நடத்தி முடித்துள்ளனர் போலீசார். குழந்தைக்கும், பிச்சை எடுக்கும் நபருக்கும் மரபணு ஒத்துப்போகவில்லை என்றால், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம், கர்நாடக பிச்சை தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான நீதி சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களின்கீழ் பிச்சை எடுக்கும் நபர் கைது செய்யப்படுவார். பல ஆண்டு சிறை தண்டனை உறுதி.

போலீஸ் வருது, ஓடு.. ஓடு..
போலீசாரின் இந்த நடவடிக்கையால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் குறையும் என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் பெங்களூருவாழ் பொதுமக்கள். ஆனால், காக்கி சட்டைகளை பார்த்ததுமே, டிஎன்ஏ எடுக்க வருகிறார்கள் பயத்தில் தெரிந்து ஓடுகின்றனர் குழந்தைகளுடன் சுற்றும் பிச்சைக்காரர்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications