பட்டாசு வெடிங்க.., ஆனா புகை வராம வெடிங்க.. மத்திய அமைச்சர் 'அடடே'
சுற்றுசூழலை மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக புகையை உருவாக்காத வெடியைக் கண்டுபிடிக்கும் படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
டெல்லி: சுற்றுசூழலை மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக புகையை உருவாக்காத வெடியைக் கண்டுபிடிக்கும் படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
டெல்லியில் தூய்மையான காற்றுக்கான பேரணியை தொடங்கி வைத்து பேசிய இவர் அப்போது அந்த வித்தியாசமான கருத்தையும் தெரிவித்தார். இந்தப் பேரணி டெல்லியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.
சிலநாட்களுக்கு முன் டெல்லியில் வெடி பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

மாசுபட்ட நகரம் டெல்லி
இந்தியாவின் மிக முக்கியமான நகரமான டெல்லி உலகின் உள்ள மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. மேலும் மிகவும் மோசமாக மாசு அடைந்த நகரங்களின் பட்டியலிலும் டெல்லி தவறாமல் இடம்பெற்றுவிடும். சமயங்களில் டெல்லியில் இருக்கும் மாசுக்கள் அளவு அதிகமாகி கட்டுப்படுத்த முடியாத அளவையும் தாண்டி செல்கிறது. இதையடுத்து டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களின் காரணமாக இன்னும் மாசுபட வாய்ப்பு இருந்தது.

டெல்லியில் வெடிக்க தடை
டெல்லியின் சுற்றுச் சூழல் மிகவும் மோசமடைவதை தடுக்கும் பொருட்டு , சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி டெல்லியில் இந்த வருடம் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என கூறியிருந்தது. இந்தத் தீர்ப்பை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

தூய்மையான காற்றுக்கான பேரணி
இந்தத் தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. பலரும் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பேசினார். இந்த நிலையில் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தற்போது பட்டாசு வெடிப்பது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியில் 'ரன் பார் கிளீன் ஏர்" என்ற பெயரில் நடக்கும் தூய்மையான காற்றுக்கான பேரணியை தொடங்கி வைத்து பேசிய இவர் அப்போது வித்தியாசமான கருத்து ஒன்றையும் தெரிவித்தார். இந்தப் பேரணி டெல்லியில் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.

மாசு ஏற்படுத்தாத வெடி
டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து பேசிய ஹர்ஷ் வர்தன் "டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளதால் அங்கு பட்டாசு வெடிக்க தடை உள்ளது. இனி வரும் காலங்களில் இப்படி தடை இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தாத பட்டாசை தான் உருவாக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களும், அறிவியலாளர்களும் மாசு ஏற்படுத்தாத பட்டாசை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications