சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை... ஹரியானா அரசு அதிரடி
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது
ஹரியானா: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது
இந்தியா முழுவதும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. கடுமையான தண்டனைகள் இயற்றப்படாததே இத்தகைய குற்றங்களுக்கு காரணம் எனவும், பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலும் சிறுமிகள் பலாத்கார சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹரியான முதல்வர் மனோகர்லால் கட்டா, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு பதிவான பாலியல் புகார் வழக்குகளில் 25 சதவீதம் பொய்யானவை என்றும், 75 சதவீத பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், பக்கத்து வீட்டினர், ஏற்கனவே பழக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் கூறினார். எனவே இதுதொடர்பான வழக்குகளில் காவல்துறையினரின் நடவடிக்கை மட்டுமின்றி சமூகத்துக்கும் பொறுப்புள்ளது என்று முதல்வர் மனோகர்லால்கட்டா கூறினார்.












Click it and Unblock the Notifications