குஜராத்தைத் தொடர்ந்து இடஒதுக்கீடு கோரி போராட்ட களத்துக்கு வருகிறது ஹரியானா ஜாட் சமூகம்...
சண்டிகர்: குஜராத்தின் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹரியானாவின் ஜாட் சமூகத்தினரும் போராட்ட களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
குஜராத்தில் ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டங்களை நடத்திய படேல் சமூகம் இன்று இடஒதுக்கீடு கோரி கிளர்ந்தெழுந்துள்ளது. படேல் சமூகத்தின் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. 8 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இது ஏற்கெனவே இடஒதுக்கீடு கோரி போராடி வரும் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதற்காகவே அவர்களுக்கு சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு எனும் தகுதி கொடுக்கப்பட்டது. ஆனால் ஹரியானா, பஞ்சாப் நீதிமன்றங்கள் இதற்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில்தான் படேல் சமூகத்தின் கிளர்ச்சியைத் தொடர்ந்து தாங்களும் போராட்ட களத்துக்கு வரப் போவதாக ஜாட் சமூகத்தினர் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் தாங்கள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications