சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல், விரைவில் தீர்ப்பு
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கின் சூத்திரதாரி சுப்ரமணியசாமி தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு தேதியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 40வது நாளாக கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி, 177 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.
அதேபோல சொத்து மறு மதிப்பீடு பட்டியல் மற்றும் மார்பல் புனரமைப்பு பணிகள் குறித்த பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், இரு தரப்பு ஒப்பீடு அறிக்கையும் இன்றைய விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரமணியசாமி
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுப்பிரமணியசாமி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்படவில்லை. இவர் தரப்பில் ஆஜரான வக்கீல் பவன் சந்திர ஷெட்டி , ஆஜராகி அவகாசம் கேட்டார். சுப்பிரமணியசாமி நாளை (புதன்கிழமை) வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று கொண்டார்.

கூட்டு சதிக்கு ஆதாரம்
தொடர்ந்து நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞரிடம் இதில் கூட்டுச்சதி நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லையே என கேள்வி எழுப்பினார்.

30 ஆண்டுகளாக
இதற்கு பதில் அளித்த பவானிசிங், ஒரு கிரிமினல் வழக்கில் கூட கூட்டுச்சதி என்பதற்கு போதிய ஆதாரங்கள், சூழ்நிலையை கருத்தில் கொண்டே ஏற்று கொள்ளப்படும் . இது போல் ஜெ., சசிகலா, 30 ஆண்டுகளாக சேர்ந்து தான் வாழ்ந்துள்ளனர். எனவே இந்த சூழல் ஆதாரம் போதுமானது என்றார்.

தள்ளுபடி செய்யுங்கள்
இதனையே சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. எனவே ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பவானிசிங் வாதிட்டார்.

ஜெ. வக்கீல்கள் பதில்
தாக்கல் செய்யப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார் மற்றும் செந்தில் பதில் அளித்தனர்.

தண்டனையை ரத்து செய்க
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், அரசியல் காழ்ப்புணச்சி காரணமாக அப்போதைய அதிகாரிகளை வலுக்கட்டாயப்படுத்தி இந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அரசு பணியாளர்கள் தவறு
இதற்கு பதில் அளித்த பவானிசிங், அரசு பணியாளர்கள் தவறு செய்தால் செக்சன் 21 ஏ-ன் படி தான் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பு தேதி
புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை நீதிபதி நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications