பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது, இந்த நாட்டிற்கே பிரதமர்.. சீறிய ஹரியானா ஹைகோர்ட்
டெல்லி: மோடி பாஜகவுக்கு மட்டும் பிரதமர் கிடையாது, இந்தியாவுக்கே பிரதமர் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளது பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்.
தேரா சச்சா தலைவர் ராம் ரஹிமுக்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா சச்சா குண்டர்கள் திடீர் வெறியாட்டத்தில் இறங்கினர்.
இப்படி வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என உளவுத்துறை எச்சரித்திருந்தும்கூட, பல லட்சம் பேரை பஞ்ச்குலா நகருக்குள் அனுமதித்திருந்தது ஹரியானாவின் கட்டார் தலைமையிலான அரசு.

31 பேர் பலியான பரிதாபம்
இதனால் கலவரம் ஆரம்பித்த உடனேயே பாதுகாப்பு படையால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 5 மணி நேரங்கள் கலவரம் நீடித்த பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் சார்ந்த சம்பவங்களில் 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.

மாநில பிரச்சினை
இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்தது பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் கோபம்
இதனால் கோபமைடந்த நீதிபதி "ஹரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-ஹரியானா மாற்றாந்தாய் பிள்ளை போல நடத்தப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்றும் நீதிமன்றம் கோபம் வெளிப்படுத்தியது.

சரணடைந்த அரசு
முன்னதாக கட்டார் அரசையும் வதக்கி தள்ளியது நீதிமன்றம். நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியது. ஹரியானா அரசாங்கம் வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டதாக தெரிகிறது என்றும் கோர்ட் தெரிவித்தது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications